CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Friday, December 19, 2008

அடடா!!!! விடைக்கும் ஒரு வினா :) :) :)


பேனா குத்தி விட்டதோ என்று நான் கவலைக் கொள்ளவில்லை !!
குத்தி விடுமோ என்ற பயத்தில்
நான் எழுதவே இல்லை !!

காயம் பட்டு விடுமோ என்ற ஐயத்தில்.....
எழுதுவதைப் போல் பாவனை செய்தேன் .......
நீ அதை புரிந்துகொண்டாய் !!!

நட்பு :)


நீ கொட்டித் தீர்க்கும் உன்
பக்கங்களாக இருப்பதில்
எனக்கு மகிழ்ச்சியே :)
பேனா குத்திவிட்டதோ என்று
கவலை கொள்ளாதே .......
உன் வரிகளின் ஆழமான மருந்தை
நீ அறிய மாட்டாய் ......

Friday, November 28, 2008

நிஜம் !!! :) :)



நினைவெல்லாம் நீயாக இருப்பின் ....
நிஜம் எதற்கு ???!!!!!

Thursday, November 6, 2008

என் சேயானால் ......... :) :)


"எனக்கு உங்கள விட்டுட்டு போக இஷ்டமே இல்லை "
"பதினஞ்சு நாள் தான அம்மா, சந்தோசமா போயிட்டு வா"

உள்ளிருந்த கண்ணீரை மறைத்துக்கொண்டு
சிரித்தாய்.....
நான் சிறக்க வேண்டுமென....
கூறிவிட்டால் உன் தோழியும்
உன் வைரமாம் கண்ணீரை அவளிடம் காட்டிவிட்டாய் என .....!
நீ என்னிடம் காட்டாத வைரத்தை துடைத்து
உன்னை வழி அனுப்பியதிலும்.......
முதன் முறை பள்ளி செல்லும் குழந்தை திரும்பிப் பார்ப்பதைப் போல்
நீ பார்த்ததிலும் .......
நான் உன் தாயானேன் ......!!
நீ என் சேயானாய்.........!!

Sunday, November 2, 2008

எல்லைக்கோடு :)

எல்லைக்கோடில்லா உலகம் காண
கனவு கண்டேன் ........
அட போங்கடா.... :(
ஒரு மதில் சுவருக்கு
நீதி மன்றத்தில்
நீங்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Saturday, November 1, 2008

கேட்டுவிடட்டுமா??

பேருந்தில் நீ அருகில் அமர்கையில்
உன்னிடம் கேட்டுவிட வேண்டும் என்று படபடத்தேன் !!
என் கற்பனைக் குதிரைகள் பறக்கின்றன ....
அது எப்படி குதிரைப் பறக்கும் என்கிறாயா?
நீ கேட்டுப் பாரேன் களிறு கூட பறக்கும் !!!!
குழம்பாதே பெண்ணே ....
நான் கேட்க்கிறேன் ...
முடியாது என்று மட்டும் சொல்லி விடாதே :(
என் கஷ்டம் பெரிதாகிவிடும் :(
சொல்கிறேன் பெண்ணே ....

ஆன்டி இந்த பாக் தலையனை மாறி வச்சிகோங்க ....
தொ மதுரை வர தான் ....
சும்மா ஜம்முனு தூங்கிட்டே வந்திருவேன் ...... :) :) :)

( ஹி ஹி ஹி ஹி ஹி ........... :D :D :D :D )

Saturday, October 25, 2008

ரசித்தப் பாடல் :)


திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆவோம்
பறந்தோடும் மானை போலே பிரிந்தொடி போனதெங்கள் நாணம்

பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி வட்டம் போடும் பட்டாம் பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்
ஓடி ஓடி ஆழம் விழுதில் ஊஞ்சல் ஆடும் ஒற்றை கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல் ??

அந்த வானம் பக்கம்
இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்

நெஞ்சில் ஏக்கம் வந்தால்
கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்

காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ
அது thannaich சொல்லுதோ
இல்லை உன்னைச் சொல்லுதோ

அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது அதோ அதோ அதோ அதோ அங்கே
ஹயயோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதே

அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது
புதிய கண்கள் நம்மில் திறக்கின்றது
மேகம் போல் காட்டை நேசி
மீண்டும் நாம் ஆதி வாசி
உன் கண்கள் மூடும் காலம் காணக் காணக் காணக் காதல் யோசி

கை தட்டித் தட்டித் தட்டிப் பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லி அனுப்பு
அட என்னை நினைத்து அதைச் சொல்லி அனுப்பு

என் காலடியில் சில வீடுகள் நகருதே
இதோ இதோ இதோ இதோ இங்கே
ஆகாகா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ இவை நத்தைக் கூடுகளோ
வீடுகள் இடம் மாறுமோ

புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்கு பூட்டு போடு
காட்டுக்குள் ஓடி ஆடு
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு

Thursday, October 23, 2008

மனிதமா ??? அத தான் தொலைச்சிட்டு தேடறோம் :(

மனிதனை மனிதன் தின்னும் பழக்கம்
அதுவும் கூட சாதாரணம் ஆகிடும் நாளை

சாவு கூட ஒரு முறை தான்
அதுவே மேலானது என்கிறார்கள்

ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு
அடுத்த ஜென்மத்தில் பலனா??

கடவுளே நீயும் நீதி மன்றமாகிவிட்டாயா?
தீர்ப்பை அடுத்த ஜென்மத்திற்கு தள்ளிவிட்டாய் !

"இத ஒன்னும் பண்ண முடியாதா? "
"உன்னால தனியே ஒனும் பண்ண முடியாது "
சொல்லிட்டாங்க

சேர்ந்து பண்ணலாமே !!??

ஒரு காதல் பாட்டினால் காதலர்கள் உருவாகினால்?
ஒரு அழுகுரலுக்கு 10 கரங்கள் போக வேண்டாமா ?

நடப்பதெல்லாம் நல்லதுக்காம் .....
இது யாருக்கு நல்லதோ??!!!!!!!

இங்கே கிருக்கிவிட்டதால் கொட்டிவிட்டேன் என் குமுறலை
அவர்களால் தனியே இறக்கிவிட முடியுமா கண்ணீரையும்? வேதனையையும் ?

ரசிக்கல்லாம்னு பேர் வச்சிட்டு சத்யமா நினைச்சு கூட பாக்கமுடியலைங்க :'( :'(

Friday, August 22, 2008

என்னால் சின்ட்டுக்கு வந்த சோதனை காலம் ........


ஒரு விளையாட்டு அரங்கம், சின்ட்டு ( எறும்பு ) மிகவும் சுறு சுறுப்பாக தன் வேலையில் மூழ்கி இருந்தது ...
நேத்து இரவு முழுதும் இந்த பசங்க விளையாடினதுல நமக்கு நல்ல வேட்டை தான், ஆனாலும் இந்த பசங்கள பாராட்டும் .. சளைக்காம சாப்பிடரானுக !!!!!
கஷ்டப்பட்டு தன் வீட்டுக்குள்ள போன சின்ட்டுவ சென்னு ( விட்டி ) பாத்துட்டு இருந்தது ....
இந்த பயலுக்கு வேற வேலையே இல்லையா ?? !! ஏலேய் சின்ட்டு சும்மா என்னத ல தூக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் உலாத்திட்டு இருக்குற??
அட சென்னு என்ன ல எப்டி இருக்குற ?? ஹா ஹா ஹா சும்மா கப் குடுக்க வந்தவரு மாதிரி அங்கனகுள்ள உக்காந்துட்டு இருக்க ?? பாத்து ல பயலுக பந்த நடு மண்டைல போற்ற போறானுக :) :)
ஒய் நாங்கலாம் சிங்கம் ல ... வர பந்த அப்டி எ கேட்ச் பிடிச்சு திருப்பி ஸ்பின் போடுவோம்ல :) :) சரில சாப்ட தான கட்டிட்டு போற .... சொல்லு நான் உன்ட ஒன்னும் கேக்க மாட்டேன்.... :) :) :)
என்னல சென்னு உனக்கு தராமலா .... :( நம்ம அப்டியா பலகிறுக்கோம்?? :(
டேய் டேய் பீலிங்க்ஸ் போடாதடா :) :) நீ பாசகார பயனு எனக்கு தெரியும்டா :) :) :) :)சரி வேலைய முடிச்சிட்டு வா ல :) :)
சின்ட்டுகு இப்ப தான் மூச்சே வந்தது :) :) சரில வாரேன் :) :)
சின்ட்டு வரதுக்குள்ள சென்னு தூங்கிட்டு
ஆகா தூங்கிட்டானே .... எட்பி எழுபறது ??சரி அவனா என்திக்கட்டும் ...
எலேய் எங்க கிளம்பிட்ட ??என்திசிட்டியா?? இந்தால லேய்ஸ் ல புது ப்லவௌர் வந்திருக்கு போல உனக்கு பிடிக்கும்னு எடுத்தாந்தேன் :) :) :)
இருவரும் சாப்பிட்டார்கள் .....
எலேய் சின்ட்டு என்னல எப்ப பாத்தாலும் சாப்பாடு சாப்பாடுன்னு அளஞ்சுகிட்டே இருக்குற ?? இத்துனூண்டு இருந்துக்கிட்டு அவ்ளோத்தையும் எப்படில சாப்படற?? நமக்கு அர லேய்ஸ் சிப்ஸ் எ கம்முனு ஆகிடுது !!
போ ல நான் ஒன்னும் சாப்பாட்டு ராமன் கிடையாது :( குளிர் காலத்துல நம்மளால இப்படி அலைய முடியுமா ?? அதன் இப்போவே சேத்து வைகேன் :)
போடா லுசு பயலே ... இருகர நேரத்த மேட்ச் பாத்தோமா, நாலு விசில் அடிச்சோமா, பயலுக பக்கதுல இருக்கத சாப்டோமா, தூங்கினோமா அப்டின்னு இல்லாம சேத்து வைகிரியலோ ??
டேய் சென்னு அப்டி .... டேய் டேய் நிப்பாட்டு ஆனா ஊனா அட்வைஸ் போடா ஆரம்பிசிடுவியே ..... நாங்கலாம் சிங்கம்ல :) :) :)
சின்ட்டு வழக்கம் போல் அமைதி ஆனது ....
இப்படியே இரண்டு பேருக்கும் நேரம் போனது ....
குளிர் காலமும் வந்தது ....
சென்னு இந்த பனில என்ன பண்ணுவான் ??
சென்னு ஒரு ஸ்வட்டர் போட்டுக்கிட்டு வெளில ஏதாது கிடைக்கானு பாக்க வந்தது ....
என்னடா இது இப்படி குளிருது !! ஒரு பயலும் ஆள காங்கல !! எனாத்த சாப்படறது ??
நம்மக்கு தான் சின்ட்டு பய இருக்கான்ல அவன் வீடு பக்கம் போவோம் ......
தக்கி முக்கி எப்படியோ ஒரு வழியா சின்ட்டு வாசல் வந்தடைந்தது சென்னு .....
டேய் சின்ன்ன்ன்ட்டு சாப்பிட ஏதும் வச்சிருக்கியாட ???
காத்து பலமா அடிச்சதால சின்ட்டுகு சத்தம் ஒன்னும் கேக்கல .... ஜன்னல் கதவு எல்லாத்தையும் மூடி வச்சிருந்தது சின்ட்டு
சென்னு பசியாலயே சத்தம் வெளில வரல, அடுத்து அடிச்ச ஒரு பலமான காத்துல அரங்கம் நாற்காலி போல்ட்ல மோதி சரியான அடி பட்டு கீழ விழுந்தது சென்னு ....கொஞ்சம் நஞ்சம் இருந்த உயிரும் குளிர்ல உறைஞ்சு உருகி காணாம போச்சு :( :( :(
சென்னு நிலமைய பாத்தா பயலுவ .... சின்ட்டு தான் சென்னுவ கொன்னுடான்னு முடிவு பண்ணிடானுக :( :( :(
போலீஸ் காரைங்க கதவ தட்டி மேட்டர் எ சொன்னது தான் சின்ட்டு அழுது புரண்டு சென்னுவ பாக்கனும்னு அழுதது .... :( :( ஒரு பயலுவளும் விடல ....
சின்ட்டு எவ்வளவோ சொல்லி பாத்தது ..... யாரும் சின்ட்டுவ நம்பல :( :( :(
சின்ட்டு மேல எப்.ஐ.ஆர் போட்டானுக , கோர்டுக்கும் கொண்டு போய்ட்டானுவ ... :( :( :(
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




என்னாட இந்த பொண்ணு சின்ன பிள்ளைல படிச்ச கதைய அப்படி எ உல்ட்டா பண்ணி சொல்லுதுன்னு நினைக்கீங்களா ??
ஹா ஹா ஆமாங்க ... இது என் கனவுல வந்தது .... வசனம் மட்டும் என்னோட கற்பனை .... கதைய எப்படி முடிக்கணும்னு தெரில .... :) :) நீங்க யாரது கிளைமாக்ஸ் சொல்லுங்க :) :) :) :)




Wednesday, August 20, 2008

திறப்பு விழா

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ....




என்னடா திறப்பு விழானு சொல்றாங்களே எங்கனு பார்க்குறீங்களா, :) :) எல்லாம் நம்ம தமிழ் ப்ளாக் திறப்பு விழா தான்... :) :) அனைவரையும் அன்போட வரவேற்கிறேன் :) :)

என்றும் அன்புடன்
நிவேதிதா :) :) :)