
நீ கொட்டித் தீர்க்கும் உன்
பக்கங்களாக இருப்பதில்
எனக்கு மகிழ்ச்சியே :)
பேனா குத்திவிட்டதோ என்று
கவலை கொள்ளாதே .......
உன் வரிகளின் ஆழமான மருந்தை
நீ அறிய மாட்டாய் ......
Friday, December 19, 2008
நட்பு :)
Posted by நிவேதிதா தேவி at 9:55 AM 3 comments
Labels: ரசித்தவை
Friday, November 28, 2008
Thursday, November 6, 2008
என் சேயானால் ......... :) :)

"எனக்கு உங்கள விட்டுட்டு போக இஷ்டமே இல்லை "
"பதினஞ்சு நாள் தான அம்மா, சந்தோசமா போயிட்டு வா"
உள்ளிருந்த கண்ணீரை மறைத்துக்கொண்டு
சிரித்தாய்.....
நான் சிறக்க வேண்டுமென....
கூறிவிட்டால் உன் தோழியும்
உன் வைரமாம் கண்ணீரை அவளிடம் காட்டிவிட்டாய் என .....!
நீ என்னிடம் காட்டாத வைரத்தை துடைத்து
உன்னை வழி அனுப்பியதிலும்.......
முதன் முறை பள்ளி செல்லும் குழந்தை திரும்பிப் பார்ப்பதைப் போல்
நீ பார்த்ததிலும் .......
நான் உன் தாயானேன் ......!!
நீ என் சேயானாய்.........!!
Posted by நிவேதிதா தேவி at 1:01 PM 4 comments
Sunday, November 2, 2008
எல்லைக்கோடு :)
எல்லைக்கோடில்லா உலகம் காண
கனவு கண்டேன் ........
அட போங்கடா.... :(
ஒரு மதில் சுவருக்கு
நீதி மன்றத்தில்
நீங்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Posted by நிவேதிதா தேவி at 1:49 AM 15 comments
Saturday, November 1, 2008
கேட்டுவிடட்டுமா??
பேருந்தில் நீ அருகில் அமர்கையில்
உன்னிடம் கேட்டுவிட வேண்டும் என்று படபடத்தேன் !!
என் கற்பனைக் குதிரைகள் பறக்கின்றன ....
அது எப்படி குதிரைப் பறக்கும் என்கிறாயா?
நீ கேட்டுப் பாரேன் களிறு கூட பறக்கும் !!!!
குழம்பாதே பெண்ணே ....
நான் கேட்க்கிறேன் ...
முடியாது என்று மட்டும் சொல்லி விடாதே :(
என் கஷ்டம் பெரிதாகிவிடும் :(
சொல்கிறேன் பெண்ணே ....
ஆன்டி இந்த பாக் தலையனை மாறி வச்சிகோங்க ....
தொ மதுரை வர தான் ....
சும்மா ஜம்முனு தூங்கிட்டே வந்திருவேன் ...... :) :) :)
( ஹி ஹி ஹி ஹி ஹி ........... :D :D :D :D )
Posted by நிவேதிதா தேவி at 7:54 AM 7 comments
Saturday, October 25, 2008
ரசித்தப் பாடல் :)

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆவோம்
பறந்தோடும் மானை போலே பிரிந்தொடி போனதெங்கள் நாணம்
பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி வட்டம் போடும் பட்டாம் பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்
ஓடி ஓடி ஆழம் விழுதில் ஊஞ்சல் ஆடும் ஒற்றை கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல் ??
அந்த வானம் பக்கம்
இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால்
கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்
காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ
அது thannaich சொல்லுதோ
இல்லை உன்னைச் சொல்லுதோ
அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது அதோ அதோ அதோ அதோ அங்கே
ஹயயோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதே
அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது
புதிய கண்கள் நம்மில் திறக்கின்றது
மேகம் போல் காட்டை நேசி
மீண்டும் நாம் ஆதி வாசி
உன் கண்கள் மூடும் காலம் காணக் காணக் காணக் காதல் யோசி
கை தட்டித் தட்டித் தட்டிப் பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லி அனுப்பு
அட என்னை நினைத்து அதைச் சொல்லி அனுப்பு
என் காலடியில் சில வீடுகள் நகருதே
இதோ இதோ இதோ இதோ இங்கே
ஆகாகா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ இவை நத்தைக் கூடுகளோ
வீடுகள் இடம் மாறுமோ
புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்கு பூட்டு போடு
காட்டுக்குள் ஓடி ஆடு
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு
Posted by நிவேதிதா தேவி at 12:41 PM 3 comments
Thursday, October 23, 2008
மனிதமா ??? அத தான் தொலைச்சிட்டு தேடறோம் :(
மனிதனை மனிதன் தின்னும் பழக்கம்
அதுவும் கூட சாதாரணம் ஆகிடும் நாளை
சாவு கூட ஒரு முறை தான்
அதுவே மேலானது என்கிறார்கள்
ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு
அடுத்த ஜென்மத்தில் பலனா??
கடவுளே நீயும் நீதி மன்றமாகிவிட்டாயா?
தீர்ப்பை அடுத்த ஜென்மத்திற்கு தள்ளிவிட்டாய் !
"இத ஒன்னும் பண்ண முடியாதா? "
"உன்னால தனியே ஒனும் பண்ண முடியாது "
சொல்லிட்டாங்க
சேர்ந்து பண்ணலாமே !!??
ஒரு காதல் பாட்டினால் காதலர்கள் உருவாகினால்?
ஒரு அழுகுரலுக்கு 10 கரங்கள் போக வேண்டாமா ?
நடப்பதெல்லாம் நல்லதுக்காம் .....
இது யாருக்கு நல்லதோ??!!!!!!!
இங்கே கிருக்கிவிட்டதால் கொட்டிவிட்டேன் என் குமுறலை
அவர்களால் தனியே இறக்கிவிட முடியுமா கண்ணீரையும்? வேதனையையும் ?
ரசிக்கல்லாம்னு பேர் வச்சிட்டு சத்யமா நினைச்சு கூட பாக்கமுடியலைங்க :'( :'(
Posted by நிவேதிதா தேவி at 3:00 PM 2 comments
Labels: வலி

